Home

Saturday, December 3, 2011

Foundation for Library Awareness: Exhibitions

Foundation for Library Awareness: Exhibitions:

'via Blog this'

Scripts of thoughts = எண்ணங்களின் எழுத்துருக்கள்: Scripts of thoughts = எண்ணங்களின் எழுத்துருக்கள்: ...

Scripts of thoughts = எண்ணங்களின் எழுத்துருக்கள்: Scripts of thoughts = எண்ணங்களின் எழுத்துருக்கள்: ...: Scripts of thoughts = எண்ணங்களின் எழுத்துருக்கள்: Foundation for Library Awareness: Book Publication... : Foundation for Library Awareness: ...

Scripts of thoughts = எண்ணங்களின் எழுத்துருக்கள்: Foundation for Library Awareness: Book Publication...

Scripts of thoughts = எண்ணங்களின் எழுத்துருக்கள்: Foundation for Library Awareness: Book Publication...: Foundation for Library Awareness: Book Publications : Title Library Classification: Librarian’s manual Theme Magic of Universe of kn...

Foundation for Library Awareness: Book Publications

Foundation for Library Awareness: Book Publications: Title

Library Classification: Librarian’s manual





Theme

Magic of Universe
of knowledge



Responsibl...

Foundation for Library Awareness: Book Publications

Foundation for Library Awareness: Book Publications: Title

Thesaurus:
Construction, maintenance and use



Theme

power
of words



Responsible committee

HRDC


...

Foundation for Library Awareness: Three Dimensional Library

Foundation for Library Awareness: Three Dimensional Library: Three Dimensional Library

: an essential
element of evidence based education



Abstract

[The Three dimensional library ...

Famous Quotations - Library


நூலகம்

 'கடலைப் போன்றது நூலகம்.
மணலை விரும்புவோர் மணலை எடுக்கலாம்
சிப்பி, சங்கு, சோகிகளைப் பொறுக்குவோர் அவற்றைப் பொறுக்கலாம்
குளிப்போர் குளிக்கலாம்
காற்று வாங்க விரும்புவோர் காற்று வாங்கலாம்
மீனினங்களைப் பிடிக்க விரும்புவோர் அவற்றைப் பிடிக்கலாம்
வெறுமனே கரையில் இருந்து கடல் அலையைப் பார்த்து மகிழ விரும்புவோர் அவ்வாறு செய்யலாம்
முத்தெடுக்க விரும்புவோர் முத்தெடுக்கலாம்.
செல்கின்றவரது நோக்கம் எதுவோ அதனை அவர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.'
--குழந்தை ம. சண்முகலிங்கம்


'விரும்பிய பாடத்தை விரும்பிய நேரத்தில் விருப்பப்படி சென்று படிக்கக்,கதவுகளை விரியத் திறந்து வைத்துக் கொண்டு,வருக! வருக! என வரவேற்றுக் காத்திருக்கும் நூலகங்களும்,இதோ! இதோ! வென இன்னமுதூட்டி இரு கரம் நீட்டி அழைக்கும் நூல்களும் இருக்கும் வரைஅந்தச் சமூகம் அறிவமுதம் பெற்ற சமூகமாக இருக்கும்.


'காற்றும் ஒளியும் நீரும் எங்ஙனம் மக்களில் வேறுபாடு காட்டாமல் எவ்வாறு பயன் தருகின்றனவோ அது போலவே அறிவும் மக்கள் அனைவருக்கும் தரப்பட வேண்டும். இதற்கான நல்ல சாதனம் நூலகமே'
வே. தில்லைநாயகம்



தினசரிகள், சஞ்சிகைகள், கவிதைக்கோவை,
திருநெறிய பாசுரங்கள் என்றவாறாய்.....
புனைகதைகள், காவியங்கள், நாவல்கள்,
பாட்டு, பொருள் பொதிந்த சங்கீதம் என்றவாறாய் .....
திரவியங்கள் திரட்டி வைக்கும்
ஞானசோதித் திருக்கோயில் தான்,
நல்ல நூலகங்கள்.
பிறவி என்ற பேறு பெற்ற பலனை நல்கும்
பெட்டகங்கள் அடுக்கி வைத்த செல்வச்சாலை
உலகில் உள்ள நூலகங்கள்

- கவிஞர். இ.முருகையன்-

கற்கும் கைமண்ணளவு கல்விக்கூடத்தில்
கல்லாத உலகளவு நூலகத்தில்
FOLA



Famous Quotations-Knowledge


Diffused knowledge immortalizes itself
Sir James Mackintosh (1765-1832)


Knowledge is of two kinds. We know a subject ourselves, or we know where we can find information upon it.           
Samuel Johnson(1709-84)

Integrity without knowledge is  weak and useless;, and knowledge without integrity is dangerous and dreadful.
Samuel Johnson(1709-84)


Half our knowledge we must snatch, not take.      
                                          Alexander Pope(1688-1744)


That virtue only makes our bliss below, and all our
knowledge is, ourselves to know.

Alexander Pope(1688-1744)

Knowledge is power.
                                               Francis Bacon(1561-1626)
           
A man of knowledge increases strength
                                                Francis Bacon(1561-1626)
For all knowledge and wonder is an impression of
pleasure in itself
Francis Bacon(1561-1626)


Knowledge is a rich store house for the glory of the
creator and the relief of man’s estate
Francis Bacon(1561-1626)

He that increase knowledge increase sorrow           
Old Testament


Famous Quotations-Librarian


நூலகர் 
கலைக்களஞ்சிய மனம், அபரிமித நினைவாற்றல், பரந்த வாசிப்புத்திறன் கொண்டவர் !
புலமைத்துவ நேர்மை, தன்னம்பிக்கை, சாமர்த்தியம் முன்னெச்சரிக்கை உணர்வு நிரம்பப் பெற்;றவர் !
கடமை மனப்பாங்கு, உதவும் மனப்பாங்கு, அடுத்தவர் கருத்தை மதிக்கும் மனப்பாங்கு, அடுத்தவருடன் நல்ல உறவை உருவாக்கும் மனப்பாங்கு கொண்டவர் !
மனித உறவுகளைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர் !
தொடர்பு ஊடகங்கள் பற்றிய புரிந்துணர்வு கொண்டவர் !
தகவற் குப்பையில் குன்றிமணித் தகவலைத் தேடி எடுக்கும் ஆற்றல் மிக்கவர் !
நூல் பற்றிய அடிப்படை அறிவு, களிமண் பதிவுகள் முதற்கொண்டு கணினிப் பதிவுகள் வரையிலான தகவல் சாதனங்கள் பற்றிய அறிவு, அறிவை முறைப்படி ஒழுங்கமைக்கும் அறிவு என்பவற்றைக் கொண்டவர்! விடயங்களைத் துல்லியமாக விளங்கும் ஆற்றல் உடையவர்!
வாசகனில் நம்பிக்கை, வாசகனில் மதிப்பு, வாசகனில் பாரபட்சமற்ற நடத்தை, வாசகனின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் தன்மை, வாசகனின் தன்மைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் போன்றவற்றில் தேர்ந்தவர் !
சமூக நடத்தை தொடர்பான விழிப்பு நிலை உடையவர்!

Famous Quotations-Book


நூல்கள்---- 
எண்ணங்களைச் சீர்செய்து கொள்வதற்கான கருவி; சிந்தனையைச் சரிபார்த்துக் கொள்வதற்கான களம்.; வாழ்நாள் முழுவதும் கூட வரும் மறக்க முடியாத துணை. பற்றிப் பிடித்து ஏறுவதற்கு ஏற்ற கொழுகொம்பு; கீழே விழுமுன் எச்சரித்துக் காப்பாற்றும் ஊன்றுகோல். இவிழுந்துவிட்டாலோ தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நல்ஆசான். வழி தடுமாறும்போது இடித்துரைத்துத் திருத்தும் நல்ல நண்பன்.
அ. ஸ்ரீகாந்தலட்சுமி

நூல்கள்---- 
வடிவம், எழுத்து இரண்டிலும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக, சிறியதாக, பாரமற்றதாக, விரும்பிய இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாக, முக்கிய அம்சங்களை வெட்டிச் சேகரிக்கக் கூடியதாக, பல பிரதிகள் எடுக்கக்கூடியதாக, தேவை முடிந்ததும் தூக்கி வீசக் கூடியதாக இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனம்.

நூல்கள்---- 
தனிமையில் இருப்பவர்களுக்கு உற்ற நண்பர்கள். துக்கத்தைப் போக்கி மகிழ்வையும் சாந்தியையும் தருகின்றன. தடுமாற்றத்தைத் தெளிய வைத்து மன உறுதியைத் தருகின்றன. ஒருவர் தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வழிகாட்டியாகின்றன. ஒருவருடைய வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்து மேம்பாடுகளை வளர்க்க உதவுகின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அறிஞர்கள், நல்ல மனிதர்கள் ஆகியோருடன் ஆத்மார்த்த நிலையில் சில மணிநேரம் வாழவைக்கின்றன. –
மறைந்த பேராசிரியர் நந்தி

ஒவ்வொரு புத்தகமும் எம்முன்னே மக்களைப் பற்றியும், அவர்கள் ஆசாபாசங்கள் பற்றியும், அவர்கள் இதயம் பற்றியும், கருத்தோட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ளத் திறந்து விடப்படும் சாளரங்கள்'

-மக்சிம்கோர்க்கி -
நூல் அழகுகள் - பத்து
சுருங்கச் சொல்லல்
விளங்கவைத்தல்
படிப்போர்க்கினிமை
நல்ல சொற்களை அமைத்தல்
இனிய ஓசையுடைமை
ஆழமுடைத்தாதல்
பொருள்களை முறையுடன் அமைத்தல்
உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை
சிறந்த பொருளுடைத்தாதல்
விளக்கமாய் உதாரணங்கள் கையாளுதல்
(தொல்காப்பியம்- பொருள்: 665)

நூற் குற்றங்கள்- பத்து
கூறியது கூறல்
மாறுபட்டுக் கூறல்
குறைபடக் கூறல்
மிகைப்படக் கூறல்
பொருளில்லாமல் கூறல்
மயங்கக் கூறல்
இனிமையில்லாதன கூறல்
இழி சொற்களால் புனைந்து கூறல்
ஆதாரமின்றித் தானே ஒரு பொருளைப் படைத்தும் கூறல்
எவ்வாறாயினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு கூறல்    (தொல்காப்பியம்- பொருள்: 663)


உங்களுடன் ஒரு நிமிடம்

பிரம்போ தடியோ இல்லாமல்,வெறுப்போ கோபமோ கொள்ளாமல்,உணவையோ பணத்தையோ எதிர்பாராமல்,உங்களுக்கு  அறிவூட்டும் நல்ஆசான் நான்.உறக்கம் என்பது எனக்குக் கிடையாது.உங்களுக்கு வேண்டியவற்றை நான் ஒளிப்பதில்லை.தவறிழைக்கும் உங்களை நான் கண்டிப்பதில்லை.உங்கள் அறியாமையைப் பார்த்து எள்ளி நகையாடுவதுமில்லை.நான் உங்களை மதிக்கிறேன் அதுபோல் நீங்களும் எனக்கு மதிப்பைத் தாருங்களேன்.

Scripts of thoughts

 எண்ணங்களின் எழுத்துருக்கள்



வாசிக்க வருபவரின் 
 வருகை ஏற்றும்,
மரியாதை காட்டிஅவர்க் 
கிருக்கை தந்தும், 
ஆசித்த நூல் தந்தும், 
புதிய நூல்கள் அழைத்திருந்தால் 
அவை உரைத்தும், 
நாளும் நூலை நேசித்து வருவோர்கள்; 
பெருகும் வண்ணம் 
நினைப்பாலும் வாக்காலும் தேகத்தாலும் 
மாசற்ற தொண்டிழைப்பீர்! 
சமுதாயச் சீர் மறுமலர்ச்சி 
கண்டதென்று முழக்கஞ் செய்வீர்!


பாவேந்தர் பாரதிதாசன்

Information resources and its standards


The explanation and examples are provided to the types identified by Thillainayakam to classify the information resources based on their standards.
1.      Elementary materials: A material which is elementary is to serve the beginner of any study. Children’s books; Text book for primary Secondary education.
2.      Seminal materials: Materials that provides the deep concepts and description in a particular topic. Topics related to Principles and philosophy, Pictures, Paintings, and Drawings.
3.      Research materials: These are the first published records of original research and development or description of new application or new interpretation of an old theme or idea. Theses Dissertations, Primary periodicals, Reports, Unpublished documents, Pamphlets, Monographs, Government documents
4.      Expository materials: Text books, Hand books, Manuals, Dictionaries, Legal documents
5.      Reporting materials: Government and non government reports, News letters, News Bulletins, Year books, Almanacs.
6.      Condensed Materials: This not only provides digested information but also serve as bibliographical key to primary information resources. The basic aim of these kind or resources is to assist the user in locating the existence of or identifying a book or any other material which may be of interest to him. Bibliographical tools such as Abstracts, Indexes, Bibliographies and Information analysis and consolidation products such as Technical reports, Trend reports, State-of-the-Art-Reports are under these categories.


எண்ணங்களின் எழுத்துருக்கள்

இது நூலகவியல் உலகம் நூலகர் நூலகர் என்கின்றீர் நுவலும் நூலகர் யாரையா

Information Resources-Definition


When the human society entered in a world named as information technology era, the library science discipline started experiencing the result of information revolution and the difficulties of finding information due to information explosion and information overload. When the searching of information become difficult due to the exponential growth of information quantitatively and qualitatively, the library and information science professionals started thinking the ways and means  to organize the  information with the help of information technology. 
The term Information sources and information resources have been used synonymously in various literature (Gopinath 1984; Rajagobalan 1986; Krishankumar 1984; Seetharama 1985 ) of Library and Information science since early 1970s. In his book ‘Information sources in science and technology’  Parker used the term ‘information sources’ and  categorized  information sources into four types as people, Organisations, the literature and the Information services (Parker 1975). The same concept was followed by Gothard and he used the term ‘Information resources’ instead of ‘sources’ in his book ‘Information resources guide-Britain’ (compiled and edited). The library collections of various institutions were considered as the resources of their institutions. (Gothard  1975)

Though both the terms are used interchangeably there is a difference between these two terms. A particular information material is regarded as a ‘source’ of information for an individual when it would fulfill the information need of a particular user while all the materials in a library is  treated as resources.

 It was identified that the term ‘resource’ was more appropriate than ‘source’ in the modern society in which information is treated as a resource.  The term has not yet been included in the standard dictionaries and glossaries of the discipline in spite of the fact that it has been in use since 1970s.
The term resources are more suitable for present day library for following reasons.

           ·         The transformation of defining the concepts of information from traditional approach which regards information as both input and output of research and development to economic approach which views information as a fundamental energy that affects all community pave the way to consider all the recorded information as resources.

          ·         The present day libraries are no longer to be a store house of knowledge, limited to only particular members of the society, and books were meant for preservation. It has grown from one library of a community to many libraries of different kinds to serve different types of users and is regarded as service institution aiming the users to make the most effective use of the resources and services of the library by satisfying the first law of library science ‘ books are for use’ .
           ·         The present day libraries are considered as resource centre for their parent institution and categorization as academic libraries, public libraries, special libraries  according to the nature and the purpose of the parent institution make libraries to have only suitable materials for their users by satisfying the third law of library science ‘every book its reader’.  All materials of the particular library will be treated as resources and inactive materials will no longer be in the shelves.  

Information Sources - Definition


When it was identified that non documentary information gained from human as well as institutions could also be functioned as information materials, there was a need to find out a new term which could include non documentary information since the term ‘document’ is appropriate only for documentary information.  The new term information sources had become widely used terms in the library science literature. With an introduction of this new term, recorded information was, for the first time in history, classified according to the characteristics of the information rather than classifying them based on to the physical format of the materials. All the information sources were classified according to their content into three categories such as primary information sources, secondary information sources and tertiary information sources (Rajagobalan, 1983).   

Document-definition


Document
When it was felt that the name ‘book’ is not appropriate to address all the information storage devices which have undergone many new changes in their physical format and style due to the scientific and technological development, the glossaries of librarianship started adopting a new term ‘document’. 
The term document refers to printed, handwritten and engraved materials both in book form such as books, periodical publications, and non book form like microfilms, photographs, gramophone records, tape records etc (Krishankumar 1978).  
According to Joan M. Reitz a document is ‘a generic term for a physical entity consisting of any substance on which is recorded all or a portion of one or more works for the purpose of conveying or preserving knowledge (Reitz 2006). 
Dr.S.R.Ranganathan has provided even a more elaborated and descriptive definition for the term document  as ‘A record made on a more or less flat surface or on a surface admitting of being spread flat when required, made of paper or other material fit for easy handling, transport across space, and preservation through time of thought created by mind and expressed in language or symbols or in any other mode, and or a record of natural or social phenomena made directly by an instrument without being passed through the human mind and woven into thought created and expressed by it. ( Ranganathan   1961)

Book - Definition


Variety of names such as book, document, information sources, information resources, information materials, information media, etc are common in use in present society to address the recorded information. At the same time, the term ‘Book’ is used as an accepted and  widely used term from ancient time to the present day society to refer any recorded information.  References in sangam literatures have revealed that different names such as ‘Ēdu’, ‘Õlai’ (names of writing materials), ‘suvatu’, ‘Tūkku’ (means poem), ‘Ňūl’(name of binding thread), ‘Panuval’( means telling), ‘Puttakam’( a place for having  new ideas), ‘Pottakam’ (bundle up or full of new ideas)  were common to address the term ‘book’. One of the ancient Tamil literatures ‘Naladiyar says that ‘puttakamē sāla tokuttum’ means compiling the book in a proper way (Naladiyar  318) 

The term book is defined as ‘A set of blank sheets of paper bound along one edge and enclosed within protective covers to form a volume, especially a written or printed literary composition presented in this way (Dictionary of library science 1992). A collection of leaves of paper, parchment, vellum, cloth, or other material (written, printed, or blank) fastened together along one edge, with or without a protective case or cover. The origin of the word is uncertain. It may be derived from the Anglo-Saxon boc (plural bec) or from the Norse bok, meaning "book" or "beech tree," possibly in reference to the wooden boards originally used in binding (Reitz 2006). At a UNESCO conference in 1964 a book was defined as a non-periodical printed publication of at least forty-nine papers, exclusive of cover page’. The ANSI standard includes publications of less than 49 pages that have hard covers.  

3D Library


Three Dimensional Library
: An essential element for evidence based education

Definition 
3D library is the new concept consisting of three important elements in a unique discipline arranged in a meaningful manner to explore information for self learning process.
According to the concept of the 3D Library, there are three important elements  arranged in a meaningful manner. This arrangement is made with the sole purpose of promoting self-learning and knowledge gathering with one’s own initiative through visualising by senses first and then conceptualizing through reading.
Taking humanity’s endless capabilities into consideration, this project aims to place all its tasks on humanity as its primary element. A well-informed society of people will nonetheless improve its total ability to think and perform in a learned manner. The project places reading as one of the major avenues for acquiring knowledge and information.

Need of the project
·         In our society over the last 30 years or so the tide in reading has been on the upsurge.  reading promotion programmes in national library levels, school education level are all are symptoms of the persisting interest in reading.
·         Changing Background in Sri Lanka –     user-oriented pattern of library services
·         Limitations of the University education system - Time frame of the courses .
·         New responsibilities of Librarianship in Sri Lanka - Importance of Information literacy
·         Need of a suitable solution to attract the readers - maximum benefit with minimum input

Objectives
The following are the major objectives of the project:
1.      Increasing the standard of literacy of readers.
2.      Guiding the readers to identify the various dimensions of information.
3.      Making a specific subject familiar by displaying of corresponding script, picture and physical objects.
4.      Encouraging the reader to observe the practice of evidence based research and education.

By working towards attaining these objectives, the project aims to transform the library from its traditional role of a place of knowledge preservation into a new functional role of a of a place of knowledge experimentation. The project also considers that the practice of object-oriented knowledge gathering will help to develop the practice of preservation of valuable ( cultural & historical ) objects available in the society.
The three basic elements of The 3D Library are as follows:
1.      Objects and their meaning – as primary resources.
2.      Documents and related materials – as secondary resources
3.      Information bits – as tertiary resources.

Application of the concept
Accordingly, the Library University of Jaffna introduces a new service as 3D Library to show the various dimensions of Information to the readers. It Introduces three dimensional role of library with information, information materials and the realia and artefacts  of a specific subject. Students can earn a new knowledge in a subject with an attraction and concentration.
In the celebration of the reading month of the year 2009 October, the Library organizes an exhibition corner at the centre part of the library with the Model of a 3D Library in some specific subjects.

Formation of the project -About the 3DL
3D library is the new concept consisting of three important elements in a unique discipline arranged in a meaningful manner to explore information for self learning process.
  • Increasing the information literacy of readers.
  • Showing the various dimensions of Information to the readers
  • Introducing three dimensional role of library with information, information materials and the realia of  a specific subject
According to the concept of The 3D Library, there are three important elements  arranged in a meaningful manner. This arrangement is made with the sole purpose of promoting self-learning and knowledge gathering with one’s own initiative through visualising by senses first and then conceptualizing through reading.
Taking humanity’s endless capabilities into consideration, this project aims to place all its tasks on humanity as its primary element. A well-informed society of people will nonetheless improve its total ability to think and perform in a learned manner. The project places reading as one of the major avenues for acquiring knowledge and information.

Need and Rationality
The following thoughts emphasis the need of this project:
v     In our society over the last 30 years or so the tide in reading has been on the upsurge.  Reading promotion programmes in national library levels, school education level all are symptoms of the persisting interest in reading.
v     Changing Background in Sri Lanka –     user-oriented pattern of library services
v     Limitations of the University education system - Time frame of the courses.
v     New responsibilities of Librarianship in Sri Lanka - Importance of Information literacy
v     Need of a suitable solution to attract the readers - maximum benefit with minimum input

The following are the major objectives of the project:
v     Increasing the standard of literacy of readers.
v     Guiding the readers to identify the various dimensions of information.
v     Making a specific subject familiar by displaying of corresponding script, picture and physical objects.
v     Encouraging the reader to observe the practice of evidence based research and education.
By working towards attaining these objectives, the project aims to transform the library from its traditional role of a place of knowledge preservation into a new functional role of a of a place of knowledge experimentation. The project also considers that the practice of object-oriented knowledge gathering will help to develop the practice of preservation of valuable ( cultural & historical ) objects available in the society.

Definition of basic elements
The three basic elements of The 3D Library are as follows:
4.      Objects and their meaning – as primary resources.
5.      Documents and related materials – as secondary resources
6.      Information bits – as tertiary resources.

Objects and their meaning (1st dimension)
Objects runs the gamut of human experience from the stone axes and spear-heads of primitive man to the most sophisticated electronic mechanisms of today’s scientists and engineers. Objects, as the first dimension of 3d library, reach the readers as primary resources through the faculty of body in the form of seeing, hearing, smelling, tasting and touching and occupy their location in the low level of the pyramid.  Objects representing all the cultures and sub cultures in the form of artefact (realia or models ) could be taken into consideration. All the objects already been produced or being made in a particular subjects could be collected from all the members of the society and placed here . It would be more useful to collect the artefacts  available in each subject since artefacts have the ability to motivate the readers and are more powerful to  induce the interest to read.

For example  all the objects with regard to sculpture could be arranged by material and the process. All the objects based on materials from stone age to present times could be collected and arranged according to the base materials used. Based on the process the objects related to sculpture could be arranged as objects related to carving and casting.  According to materials Physical objects, used to explain a specific subject, can be in the form of models or realia which can be collected from society.
The object oriented display has another inherent characteristics  which leads to a new concept  ‘social equilibrium’. Since any library whether academic or public are prepared to give a space for all the products for the knowledge as well as skills of  all members of the society irrespective of literates or illiterates for the  production of the objects, the considerable coordination and the cooperation of the human resources of the society reaches the libraries through this object display.
The object display has an outstanding quality of having the formation of reading community at various levels since the contribution of all members of the society from farming to carpentry, welding etc is needed for the object display.   Since the libraries whether public or academic provide opportunity not only to knowledge  but to skills, the object oriented display will pave the way to accommodate all the skill based objects produced by the members from all the social strata such as farmers, welders, carpenters etc irrespective of their education. The formation of reading society at various level is the outstanding features of this object oriented display since it  warrants for  considerable support and cooperation of  these human resources  at various level

Resources and their formats (2nd dimension)
The description about the objects used can be found in the form of script, documents, books etc. and they reach the reader as secondary resources. They could be either in the form of book form materials such as  books, journal articles, pamphlets, dissertations or non book materials as micro forms, audio video tapes ,internet etc. They are considered as secondary resources for the purpose of knowledge gathering as second dimension of the 3 D library and placed in the middle of the pyramid. Contribution from the selective members of the society whether in book form or non book form. Such display of documents help the readers for the the easy access to information since all the relavent materials hidden in the shelves and the materials scattered everywhere due to the techniques of broken order brought together and displayed here.
While the first dimension  focuses  social equilibrium by bringing the skills of  all the members of the particular society, the second dimension helps to select the members who can contribute to the knowledge of the society by their writings. At the same time the document part  will be helpful to identify the gaps of the book production in the subjects and concentrate more in producing the materials by the society.

Information and their standards (3rd dimension)
Formation of information is considered as the third dimension of this 3d library and treated as tertiary resources and occupy its location in the top level of the pyramid reflecting the density in quality. Information could be either produced from the object as primary information  through the observations, interviews with regard to the creators of objects, etc or abstracted or extracted from the object related materials in the form of bits, abstracts,, etc.   Since the documents are produced in different language and different style of writing the main advantage of this part is to help the readers to overcome all the barriers to the access to information in a particular subjects.

The information needed for the third dimension could be obtained in the following ways.
·         display of the graphs, diagrams, laboratory process, photographs etc.
·         display of the interviews made with the human resources
·         Compiling information from other relevant resources.
·         Producing information through translating from foreign languages
·         Getting the information from websites.
·         Display of the materials borrowed from other sources if the library doesn’t have the same.

It is expected that the formation of the third dimension is the contribution from the library professionals since the responsibility of finding the proper location for a  particular subject which have already been formed through the mode of formation and the subject which are being formed due to the new research and development in the particular discipline and need to do information search  to fulfill the information need of the  readers have increase the responsibility of the library  professionals in the generation of tertiary information of the third dimension. This could be done by providing translation services to the materials displayed in the second dimension of the pyramid written in foreign languages and compilative services in the form of abstracts, digests etc. Suppose if it is identified that the document part is very weak in a particular subject it is the responsibility of the librarians to gather and produce information  regarding the objects  from  various sources – materials in other libraries, information included in other relevant documents, related websites. if this is too not enough to fill the information part human resources could be approached and the interviews, opinions of these human resources will be of great assets to fulfil the information part of the pyramid. 

Steps involved
         Any library can introduce and adopt this kind of  display.
         Small space which could be the readers attraction  is well enough to conduct this program. This may be either the corner of a reference section or center of the section . Even a corner of the class room is useful to have this
         The Topic of this display could be made once in a week based on the curriculum.
         It must be realized the fact that the objects will be produced for each and every subject. At the same times it will be very difficult to collect the objects which are given up by the society. In this contexts picture oriented display will be of more helpful in place of objects to attract the readers. The subjects like literature, philosophy in the field of humanity have very less opportunity for the objects. In this case picture oriented materials will be more helpful. for example if we chose the topic ‘poetry’ for the 3D library  we will have to collect the objects in the form of statues of great poets worldwide. If we find it difficult to collect this we could at least display the pictures of them.
         Every library should establish storage for the objects. One class front cabinet will be enough for a small school library. The collection of objects could be used to form an art gallery and preserve in the centre of the school.
Outputs of the project
The followings are the notable outputs of this project
·         Remarkable increase in number of visit of readers.
·         According to the opinion book and feedback form most of the viewers were attracted by 3DL with a positive manner and they felt their IL also enriched by this concept.
·         Moral support of the departments to develop such kind of service.
·         Appreciation and collaboration of departments to continue the service to improve the Information Literacy of their students by providing related images and objects of their subject.
·         Development of Library awareness at society level through the requested visits of the schools
·         Re- origination of documentation culture among the readers society

As a total view, feedbacks of the viewers have shown the effectiveness of such service and the need of emerge to spread the idea all over the country.


Friday, December 2, 2011

Information Literacy and School Libraries


தகவல் தொழிநுட்ப யுகமொன்றில் 
பாடசாலை நூலகங்களும் தகவல் அறிதிறனும்
       


அறிமுகம்
தகவல் வெளிப்பாட்டு வடிவங்களான உரு வடிவம், எண்ணும் எழுத்தும் சேர்ந்த வரி வடிவம், கோடுகள் இணையும் வரைபு வடிவம், கண்ணுக்குப் புலப்படாத அலை வடிவத் தகவல்களின் ஈட்டல், செய்முறை, சேமிப்பு, பரிமாற்றம், பரவலாக்கம் போன்ற அனைத்து செய்முறைகளுக்கும் தனித்தோ அல்லது இணைந்த வகையிலோ பிரயோகிக்கப்படும் கைவினைத் தொழிநுட்பம், அச்சுத் தொழிநுட்பம், கட்புல செவிப்புலத் தொழினுட்பம்,  பிரதியாக்கத் தொழினுட்பம், தொலைதொடர்புத் தொழினுட்பம், கணினித் தொழினுட்பம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த சேர்க்கையில் இன்றைய உலகு இயங்குகின்றது. கையடக்கத் தொலைபேசிக்கு ஒருநாள் ஓய்வு கொடுப்பது கூட சாத்தியமற்றது என்றளவிற்கு  நாளாந்த வாழ்வு தொழிநுட்ப உலகுடன் இறுகப் பிணைந்து போயிருக்கிறது. இணையம் இன்றி இயக்கம் இல்லை என்பதையும் முகநூலே (Facebook)  முதன்மை நூல் என்பதற்கும் அறிமுக உரைகளும் அணிந்துரைகளும் தேவைப்படாத அளவிற்கு அதன் இன்றியமையாமை அனைத்து மனங்களாலும் உணரப்படுகின்றது. சர்வதேச தொலைத்தொடர்பு நாள், நூல் நாள் போன்று தொழிநுட்பமற்ற நாள் (No Technology dayஎன்ற ஒன்றை சர்வதேச ரீதியில் கொண்டாடவேண்டிய தேவையை மனித சமூகம் உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்னுமளவிற்கு தகவல் தொழிநுட்ப உலகின் ஆக்கிரமிப்பால் மனித சமூகம் திணறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய பின்னணியில் தான் தகவல் அறிதிறன் என்னும் பதமும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.

ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் தேவையை முன்னிட்டு ஒரு மொழியின் அடிப்படையை மட்டும் கற்றுக் கொள்வதன் மூலம்  வாசிப்பதற்கும்  எழுதுவதற்குமான ஆற்றல் என்று பொருள் கொள்ளப்பட்ட எழுத்தறிவு அல்லது அறிதிறன் (literacyஎன்ற தனிப்பதமானது பொருட்துறைகளை நன்கு விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல், தகவலை நன்கு விளங்கிக்கொள்வதற்கும் தொழிநுட்பக் கருவிகளை நன்கு கையாள்வதற்குமான ஆற்றல் என்ற விரிந்த வரைவிலக்கணத்தைக் கொண்ட தகவல் அறிதிறன் (Information literacyஎன்ற கூட்டுப்பதமாக அண்மைக்காலங்களில்; வளர்ச்சியடைந்திருக்கிறது. தகவல் அறிதிறன், தொழிநுட்ப அறிதிறன், கணித அறிதிறன் போன்ற பதங்கள் தற்கால தகவல் பதிவேடுகளில் கணிசமாகப் பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி நாளாந்த வாழ்விலும் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன.


தகவல் அறிதிறன்
தேவையான தகவலைக் கண்டறிதல், மீளப் பெறல், பகுப்பாய்வு செய்தல், பயன்படுத்தல் முதலிய திறன்களின் தொகுதி தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிப்பிடப்படுகிறது. 1970களின் ஆரம்பகால தோற்றப்பாடுகளில் ஒன்றான தகவல் அறிதிறன் என்ற கருத்துநிலையானது இன்றைய ஒவ்வொரு மனிதனதும் இன்றியமையாத தேவையாக, உலக அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் அளவுகோலாக, சுயகற்றலுக்கான ஆளுமைவிருத்தியின் தூண்டியாகக் கருதப்படுகிறது. தகவல் அறிதிறனின்றி  வாழ்க்கை முழுவதற்குமான கல்வி என்ற கருத்துநிலை பொருளற்றது என்பதைக் கல்விச் சமூகம் உணரத் தொடங்கியிருக்கிறது. தகவற் சுமைக்கான தீர்வாகவும்;, தகவற் பதுக்கலுக்கான தீர்வாகவும், தகவலுக்கான நுழைவாயிலாகவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒன்றாகவும், வேகமாகவும் சரியாகவும் முடிவெடுப்பதற்கான தூண்டலைத் தருவதற்கான அடிப்படையாகவும் இதன் முக்கியத்துவம் மாறியிருக்கிறது. தகவற் தேவை, அதன் கிடைக்கும் தன்மை, தகவலைத் தேடும் வழிமுறைகள், கிடைக்கும் தகவலை மதிப்பிடவேண்டிய தேவை, கிடைத்த தகவலின் நுட்பமான கையாளுகை, தகவலைப் பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நியமங்கள், தகவலைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் சரியான வழிகள், கிடைத்த தகவல்களை எவ்வாறு முகாமைசெய்வது என்பன தகவல் அறிவில் உள்ளடங்குகின்றன. தகவல் தொழினுட்பம், தகவல் வளங்கள், தகவல் செய்முறை, தகவல் முகாமைத்துவம், அறிவு உருவாக்கம், அறிவுப் பரம்பல், பேரறிவு என்பன தகவல் அறிதிறனின் ஏழு படிநிலைகளாகக் கொள்ளப்படுகின்றன.

வரைவிலக்கணம்
தகவல் அறிதிறன் என்ற பதம் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துநிலைகளும் வரைவிலக்கணங்களும் நிலவுகின்றன. ஒரு சமூகத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் தான் வாழும் சமூகத்தில்; புத்திபூர்வ முறையிலும் வினைத்திறன்மிக்க வகையிலும் பங்குகொள்வதற்குத் தேவையான திறன்கள் அனைத்தும் தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது. அமெரிக்க நூலக சங்கத்தின் கருத்துப்படி தகவல் தேவைப்படும் காலத்தை இனங்காணுவதற்கும், தேவைப்படும் தகவல் உள்ள இடத்தைக் கண்டறிவதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கும் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய ஆற்றல் தகவல் அறிதிறன் என்ற பதத்தால் குறிக்கப்படுகிறது. [ALA 1989].  
கணினிகளைப் பயன்படுத்தும் அறிவும் தகவலின் தன்மைகளை இனங்கண்டு அதன் தொழிநுட்ப கட்டுமானம் அதன் சமூக கலாசார, தத்துவ விளைவுகள் என்பவற்றுக்கூடாக அதனை அணுகுவதற்கான அறிவு தான் தகவல் அறிதிறன் என இன்னொரு வரைவிலக்கணமும் உண்டு. [Hughes 1996]


வரலாறு
தகவல் அறிதிறன் என்ற சொற்றொடரானது 1974ம் ஆண்டு நூலகங்கள் மற்றும் தகவல் அறிவியலுக்கான தேசிய ஆணைக்குழுவின் சார்பாக போல் ஜி.சேர்கோவ்ஸ்கி என்பவரால் எழுதப்பட்ட அறிக்கையில் முதன்முதல் அச்சு வடிவில் உள்ளடக்கப்பட்டது. தகவல் அறிதிறனைக் கொண்ட ஒருவர் பலதரப்பட்ட தகவல் கருவிகளையும் தமது பிரச்சனைகளுக்கு தகவல் தீர்வை உருவாக்குவதற்குத் தேவைப்படும் முதனிலை வளங்களையும் பயன்படுத்துவதற்கு அவரிடம் இருக்கும் தொழிநுட்பங்களதும் திறன்களையும் விபரிப்பதற்கு இப்பதம் பயன்படுத்தப்பட்டது.  (Zurkowski 1974)
தொடர்ந்து இப்பதத்திற்கு மிகச்சிறப்பான வரைவிலக்கணத்தை வடிவமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எழுத்து அறிதிறன், கணினி அறிதிறன், நூலகத் திறன்கள், தருக்கரீதியாக சிந்திக்கும் திறன்கள் ஆகிய ஏனைய கல்விசார் இலக்குகள் தகவல் அறிதிறனுடன்  தொடர்புடையதாகவும் அதன் அபிவிருத்திக்கான முக்கிய ஆதாரமாக கருதப்படினும் தகவல் அறிதிறன் என்ற பதம் இவை அனைத்தையும் தாண்டி தனித்துவ பதமாக தகவல் சமூகம் ஒன்றில் வாழும் ஒருவரின் சமூக பொருளாதார நலனுக்கான திறவுகோலாக மாறியிருக்கிறது.

தகவல் அறிதிறனும் தேவைப்படும் திறன்களும்
தகவற் தேவையை விளங்கிக் கொள்ளும் திறன்: தகவல் தேவைப்படுகிறது என்பதை இனங்காணல், தகவல் ஏன் தேவைப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளல், என்ன வகையான தகவல் எப்போது, எந்த வடிவில், எவ்வளவு  தேவைப்படுகின்றது என்பதை இனங்காணல், காலம், வடிவம், அண்மைத்தன்மை, அணுகுகை போன்ற தகவலை அணுகுவதற்கான தடைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
தகவலின் கிடைக்கும் தன்மையை விளங்கிக் கொள்ளும் திறன் : உலகிலுள்ள தகவல் வளங்களின் வகை, அவை கிடைக்கும் இடங்கள், அவற்றைப் பெறும் வழிவகைகள், அவற்றைப் பயன்படுத்தும் காலம், தகவல் வளங்களின் தனித்தன்மை, அவற்றிற்கிடையிலான வேறுபாடுகள் என்பன இதில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
தகவலைக் கண்டறிவதற்கான திறன்: பொருத்தமான வளங்களை தேடுவதற்கான ஆற்றல், பொருத்தமான தகவலை இனங்காணும் ஆற்றல், இனங்காணப்பட்ட தகவல் வளங்களில் மேலார்ந்த தேடல், ஆழ்ந்த தேடல், போன்ற தேடல் முறைகளைப் பயன்படுத்தித் தேடல் செய்வதற்கான ஆற்றல், சொல்லடைவாக்க சாராம்சப்படுத்தல் பருவ இதழ்களைப் பயன்படுத்தி தேடல் செய்யும் நுட்பங்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
கிடைக்கும் தகவலை மதிப்பிடவேண்டிய தேவையை விளங்கிக்கொள்ளும் திறன்: தேடல் மூலம் கிடைத்த தகவலின் அதிகாரபூர்வத் தன்மை, துல்லியத் தன்மை, அண்மைத்தன்மை, பெறுமதி, பக்கச்சார்புத் தன்மை, தகவல் தேவைக்குப் பொருந்தும் தன்மை என்பவற்றை மதிப்பீடு செய்தல் இதில் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
கிடைத்த தகவலின் நுட்பமான கையாளுகையை விளங்கிக்கொள்ளும் திறன்: கிடைத்த தகவற் பெறுபேற்றை ஆய்வு செய்தல், அவற்றை பொருத்தமான முறையில் வழங்கும் முறைகளை கண்டறிதல், ஒப்பு நோக்குதல், ஒன்றுபடுத்தல், அவற்றிலிருந்து மேலதிக தகவல்களைப் பெறும் முறைகளை கண்டறிதல் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
தகவலைப் பயன்படுத்துவது தொடர்பான ஒழுக்க நியமங்களை விளங்கிக் கொள்ளும் திறன்: பொறுப்புணர்வுடன் தகவலை பயன்படுத்த வேண்டியதன் அவசியம், அதில் பின்பற்றப்படவேண்டிய ஒழுக்க நடத்தைகள், தனிநபர் தகவல் தொடர்பில் மனிதத்துடன் அதனைப் பயன்படுத்தல், இரகசியம் பேணல், பிறருடைய செயல்களை மதித்தல், நடுநிலைதவறாமை என்பன இதில் உள்ளடங்குகின்றன.
தகவலைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் சரியான வழிகளை விளங்கிக் கொள்ளும் திறன்: கிடைத்த தகவலை இலகுவாக பயன்படுத்துவதற்கேற்ற வகையிலமைந்த பொருத்தமான வடிவம் எது? பொருத்தமான தேவையுள்ளவர் யார்?;  பொருத்தமான சூழலில் எவ்வாறு வழங்குவது? இதற்குத் தேவையான தொடர்பாடல் ஊடகங்கள் எவை? பொருத்தமான தொடர்பாடல் முறைகள் எவை? தயார்ப்படுத்தல் முறைகள் எவை?
கிடைத்த தகவல்களை எவ்வாறு முகாமை செய்வது என்பதை விளங்கிக் கொள்ளல்: கிடைத்த தகவலை எவ்வாறு சேமிப்பது? எந்தெந்த முறைகளில் நிர்வகிப்பது? எவ்வாறு பாதுகாப்பது? எவ்வாறு ஒழுங்குபடுத்துவது? எவ்வாறு மீளப்பெறுவது?

தகவல் அறிதிறனின் கூறுகள்
1. தகவல் தொழினுட்ப அறிவு: ஒரு தனிநபர் தான் கொண்டிருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்ற கல்வி, வேலை, தொழிற்திறன்சார் வாழ்க்கை என்பவை சார்ந்த தகவல் தொழிநுட்ப கருவிகளின் பயன்பாட்டை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல்.
2. தகவல் வள அறிவு: தகவல் வளங்களின் தோற்றம், உருவமைப்பு, வடிவமைப்பு, உள்ளடக்கம், உட்பொருள், தரம், பயன்பாடு, தகவற் தேவை, ஒழுங்கமைப்பு,  போன்றவற்றை விளங்கிக் கொள்ளவதற்கான ஆற்றல்
3. சமூகக் கட்டுமான அறிவு: தகவலின் சமூக ரீதியான நிலை அதன் உற்பத்தி என்பற்றை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றல்.
4. தகவல் தொழிநுட்ப கருவிகள் சார் அறிவு: இன்றைய ஆய்வுப் பணிகளுக்கு  உதவக்கூடிய தகவல் தொழிநுட்ப கருவிகளை விளங்கிக் கொள்வதற்கான ஆற்றலும் பயன்படுத்துவதற்கான ஆற்றலும்.
5. வெளியீட்டு அறிவு: ஒருவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் அவரது கருத்துக்களையும் இலத்திரனியல் வாயிலாக நூலிய அடிப்படையிலும் பல்லூடக வடிவிலும் வடிவமைக்கவும் வெளியீடு செய்வதற்குமான ஆற்றல்.
6. புதிய தொழிநுட்பங்களின் அறிவு: புதிய தொழிநுட்பங்களை விளங்கிக் கொள்ளவும், பின்பற்றவும், மதிப்பீடு செய்யவும், தகவல் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தவும், புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நுண்ணறிவுமிக்க தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தேவையான அறிவு.
7. திறனாய்வு அறிவு: தகவல் தொழிநுட்பங்களின் புலமைசார், மனித மற்றும் சமூக பலங்கள், பலவீனங்கள், வசதிகள், வரையறைகள், நன்மைகள், செலவினங்கள் போன்றவற்றை தர்க்கரீதியாக மதிப்பிடும் ஆற்றல்.

பாடசாலையும் தகவல் அறிதிறன் மாதிரிகளும்
ஸ்கொட்லாந்தில் பல்கலைக்கழக கல்லூரியொன்றின் தகவல் அறிதிறன் சார்ந்து பொறுப்பதிகாரியாக இருக்கும் ஜேம்ஸ் ஹேரிங் (( James Herring) ) என்பவரால் விருத்தி செய்யப்பட்டு நோக்கம், அமைவிடம், பயன்பாடு, சுய மதிப்பீடு ஆகிய நான்கு அம்சங்களையும் உள்ளடக்கி PLUS (Purpose, Location, Use, Self evaluation)  என்ற முதலெழுத்துப் பெயரால் அடையாளங் காணப்படும் தகவல் அறிதிறன்களின் மாதிரி பாடசாலைகளுக்கு பொருத்தமானது எனக் கருதப்படுகிறது. இதில் நோக்கம் என்பது ஆய்வு அல்லது மேற்கொள்ளப்படும் பணி ஒன்றின் நோக்கத்தை இனங்காணல் என்பதாகவும், அமைவிடம் என்பது நோக்கத்துடன் தொடர்பான தகவல் வளங்களின் அமைவிடத்தை கண்டுபிடித்தல் என்பதாகவும்,  பயன்பாடு என்பது தகவல்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்தல் அல்லது நிராகரித்தல், தகவலை பெறும் பொருட்டு படித்தல், குறிப்பு எடுத்தல், அதை வெளியிடுதல் என்பதாகவும், சுயமதிப்பீடு என்பது தமக்கு ஒதுக்கப்பட்ட பணியில் தகவல் திறன்களை பிரயோகிப்பதில் தமக்கிருக்கிருக்கும் ஆற்றலை மாணவர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள், அதிலிருந்து எதிர்காலத்திற்காக எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதாகவும் அமைகிறது.

1998 இல் பாடசாலை நூலகர்களுக்கான அமெரிக்க சங்கமும் கல்விசார் தொடர்கள் மற்றும் தொழிநுட்பத்துக்கான சங்கமும் இணைந்து முன்பள்ளி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையுள்ள மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் k12 பாடசாலைகளின் மாணவர்களது சுய கற்றலுக்கும் சமூகப் பொறுப்புக்குமான பின்வரும் ஒன்பது தகவல் அறிவு நியமங்களை மூன்று பிரதான தலைப்புகளின் கீழ் வெளியிட்டது.

தகவல் அறிதிறன்
1. நியமம் 1: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை வினைத்திறன்மிக்க வகையிலும் பயனுள்ள வகையிலும் அணுகுவர்.
2. நியமம் 2: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை தர்க்கரீதியாகவும் போட்டிரீதியாகவும் மதிப்பிடுவர்
3. நியமம் 3: தகவல் அறிவுடைய மாணவர் தகவலை சரியாகவும் உருவாக்க சக்தியுடனும் பயன்படுத்துவர்.
சுயாதீனக் கற்றல்
4. நியமம் 4: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தனிப்பட்ட ஆர்வங்களுடன் தொடர்புடைய தகவலை பெறும் திறனுடையவாராகவும் இருப்பர்

5. நியமம் 5: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் இலக்கியங்களையும் தகவலின் ஏனைய உருவாக்க வெளிப்படுத்தல்களையும் பாராட்டுவர்.

6. நியமம் 6: சுயாதீன கற்கையாளராக உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தகவலைத் தேடுதலிலும் அறிவு உருவாக்கத்திலும் உச்சத்திறனை அடைய பாடுபடுவர்;.

சமூகப் பொறுப்பு

7. நியமம் 7: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் ஜனநாயக சமூகத்தில் தகவலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பவராக இருப்பர்;.
8. நியமம் 8: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் உள்ள மாணவர் தகவல் அறிதிறன் உடையவராக இருப்பதுடன் தகவல் சார்ந்தும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த ஒழுக்கரீதியான நடத்தையை பின்பற்றுவர்;.
9. நியமம் 9: கற்றல் சமூகத்திற்கும் அதன் வழி சமூகத்திற்கும் பங்களிப்புச் செய்யும் உள்ள மாணவர் தகவல் அறிதிறனுடையவராக இருப்பதுடன் தகவல் உருவாக்கம் சார்ந்தும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த ஒழுக்கரீதியான நடத்தையை பின்பற்றுவர்.

2007இல் மேற்படி அமைப்பானது இந்த நியமங்களை விரிவாக்கம் செய்ததுடன் பாடசாலை நூலகர்கள் தங்கள் கற்பித்தலுக்கு உதவக்கூடிய வகையில் மீளஒழுங்கமைத்து 21ம் நூற்றாண்டின் கற்கையாளருக்கான நியமங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த வெளியீட்டில் தகவல் அறிதிறன், தொழிநுட்ப அறிதிறன், கட்புல அறிதிறன், நூலிய அறிதிறன், எண்மிய அறிதிறன் போன்ற  அறிதிறன்களை முதன்மைப்படுத்தியது. இந்த அம்சங்கள் அனைத்தும் திறன்கள். வளங்கள், கருவிகள் ஆகியவற்றில் கற்கையாளர்களின் பயன்பாடானது

1. தேடலுக்கும் தர்க்கரீதியாகச் சிந்திப்பதற்குமான அறிவைப் பெறுதல்;
2. முடிவுகளை எடுப்பதற்கும், புதிய நிலைமைகளுக்கும் அறிவைப் பிரயோகித்தல் மற்றும் புதிய அறிவை உருவாக்குதல்
3. அறிவைப் பகிர்தல் மற்றும் ஜனநாயக சமூகத்தின் அங்கத்தவர்களாக ஆக்கபூர்வமாகவும் ஒழுக்கரீதியாகவும் பங்குபற்றல்;
4. தனிப்பட்ட மற்றும் அழகியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல் ஆகிய நான்கு பிரதான இலக்குகளாக ஓழுங்கமைக்கப்பட்டது.


Big6 திறன்கள்
உலகளாவிய ரீதியில் தகவல் மற்றும் தொழிநுட்பத் திறன்களைக் கற்பிப்பதற்கான பிரபல்யமானதும் பரந்தளவில் பயன்படுத்தப்படுவதுமான அணுகுமுறையாக மைக் ஐசன்பேர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட Big6 திறன்கள் கருதப்படுகின்றன. [Eisenberg 2008] ஆயிரக்கணக்கான பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், வளர்ந்தோர் பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இம்முறையானது மக்களுக்கு தகவல் தேவைப்படும் போதும் தகவலைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களிலும் தகவல் பிரச்சனைத் தீர்வு மாதிரியாக பிரயோகிக்கப்படுகிறது. தனித்துவ தேவைகளின் பொருட்டு தகவலை முறைப்படுத்தப்பட்ட வகையில் கண்டுபிடித்தல், பயன்படுத்தல், பிரயோகித்தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுக்கு தகவல் தேடுகையையும் தொழிநுட்ப கருவிகளின் உதவியுடனான  திறன்களின் பயன்பாட்டையையும் இம்முறையானது ஒருங்கிணைக்கிறது.

அனைத்து வயது மட்டங்களிலும் தகவல் பிரச்சினையை தீர்ப்பதற்கான செய்முறை மாதிரியாகக் கருதப்படும் இம்முறையானது பிரச்சினை தீர்க்கும் செய்முறையில் ஆறு நிலைகளையும் ஒவ்வொரு நிலையிலும் இரு உப நிலைகளையும் கொண்டிருக்கிறது.

1. நிலை 1: பணியின் வரைவிலக்கணம்
a. தகவல் பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல்
b. தேவைப்படும் தகவலை இனங்காணல்
2. நிலை 2: தகவல் கண்டுபிடிக்கும் தந்திரோபாயங்கள்
a. கிடைக்கக்கூடிய வளங்கள் அனைத்தையும் நிர்ணயித்தல்
b. சிறந்த வளங்களை தெரிவு செய்தல்
3. நிலை 3: அமைவிடமும் அணுகுகையும்
a புத்திபூர்வமாகவும் பௌதிக ரீதியாகவும் வளங்களை கண்டுபிடித்தல்
b. ஒவ்வொரு தகவல் வளத்தின் உள்ளேயும் தேவையான தகவலைக் கண்டுபிடித்தல்
4. நிலை 4: தகவல் பயன்பாடு
a. வாசித்தல், கேட்டல், பார்த்தல், தொடுதல் ஊடாக தகவலை பெறும் செய்முறையில் ஈடுபடுதல்
b. பொருத்தமான தகவலை பிரித்தெடுத்தல்
5. நிலை 5: கூட்டிணைப்பு (ளுலவொநளளை)
a. பலதரப்பட்ட வளங்களிலிருந்தும் எடுத்த தகவலை ஒழுங்குபடுத்தல்
b. தகவலை வெளிப்படுத்தல்
6. நிலை 6: மதிப்பீடு
a. உருவாக்கத்தை மதிப்பிடுதல் (வினைத்திறன்)
b. செய்முறையை மதிப்பிடுதல் (பயன்விளைவு)


முடிவுரை
இலங்கை அரசாங்கமானது 2009ம் ஆண்டை தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலத்துக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியிருப்பதும் நீண்ட கால போரியல் வாழ்வின் அவலங்களைச் சுமந்து நலிவடைந்த ஒரு நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பாடசாலை உலகம் மிகக் குறுகிய காலத்தில் தகவல் தொழினுட்ப உலகமாக வலிந்து மாற்றப்பட்டமையும் தகவல் தொழினுட்பத்தைப் பற்றி பெருப்பித்துக் காட்டப்பட்டுள்ள கற்பனைகள் காரணமாக வயது வேறுபாடின்றி அது எல்லோரையும் ஆக்கிரமித்திருப்பதும் தகவல் தொழிநுட்பப் பயன்பாடு தொடர்பான மீள்பரிசீலனைக்கு இட்டுச் செல்வதன் அவசியத்தைத் தோற்றுவித்திருக்கிறது. முதல்தரப்பாடசாலைகளின் பாடத்திட்டத்தில் தகவல் தொழிநுட்பம் என்ற பாடம் உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்பட்டிருப்பதனால் தகவல் தொழிநுட்ப சாதனங்களைப் போதியளவு கொண்டிருக்கின்ற முதல்தர பாடசாலைகளிலும் சரி; உதவித்திட்டங்களினால் தகவல் தொழிநுட்ப உலகை பாடசாலைக்குள் வடிவமைக்க வலிந்து பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கும் ஊர்ப்பாடசாலைகளிலும் சரி தகவல் தொழிநுட்பமானது மாணவர்களின்; கற்றலை இலகுவாக்குவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், கற்றல் சூழலை இலகுவாக்குவதற்கும், உலகத்தைப் பார்ப்பதற்குமான நுழைவாயிலாகவும் இருப்பதற்கேற்றவகையில் தகவல் அறிதிறன்களுக்கான இருப்பிடமாக இருப்பதைவிட  மாணவ சமூகத்தின்; முகநூல்களுக்கான  இருப்பிடமாகவும் ஆசிரிய சமூகத்தின் இயந்திரமயமான கற்பித்தலுக்கான உதவுகருவியாகவுமே இருப்பதானது நுகர்வோர் கலாசாரத்தின் இன்னொரு அம்சமாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவந்து திணிக்கப்படும் ஏனைய அம்சங்களைப் போன்றது தானோ இந்தத் தகவல் தொழிநுட்பமும் என்ற கவலையை சமூக நலனைக் கருத்தில் கொண்ட மனங்களில் தோற்றுவித்திருக்கிறது.

References
1. ஸ்ரீகாந்தலட்சுமி, அ (2010). தகவல் வளங்களும் சேவைகளும். கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
2. American Association of School Librarians (2007). Standards for the 21st Century Learner.     [http://www.ala.org/ala/mgrps/divs/aasl/guidelinesandstandards/learningstandards/AASL_LearningStandards.pdf.
3. American Association of School Librarians and the Association for Educational Communications and Technology (1998). Information Literacy Standards for Student Learning.
4. Association of College and Research Libraries (2000). Information Literacy Competency Standards for Higher Education [http://www.ala.org/ ala/mgrps/divs/acrl/ standards/ standards.pdf
5. Bruce,  Christine (1997). Seven faces of Information literacy. AUSLIB Press, Adelaide, South Australia.
6. Eisenberg, B. M. (2008). Information Literacy: Essential Skills for the Information Age. Journal of Library & Information Technology, Vol. 28, No. 2, March 2008, pp. 39-47,
7. http://athene.riv.csu.edu.au/~jherring/PLUS%20model.htm
8. The American Library Association (1989).  Final Report of the Presidential Committee on Information Literacy. ALA.



Knowledge Vs Education

 கல்வி Vs அறிவு
எண்ணங்களின் எழுத்துருக்கள்
கல்வி
முறைமை (System) என்ற அடிப்படையில் கல்விசார் நிறுவனங்களான பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மக்களுக்கு கற்பித்தலை மேற்கொள்கிற முறைமை கல்வி எனப்படுகிறது. செய்முறை (Process) என்ற வகையில் ஒரு சமுதாயம் மதித்துப் போற்றும் வாழ்க்கை நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றையும் வழிவழியாக அதனுள் பரவிக் காணப்படும் திறன்களையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிக்க சமுதாயம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்முறைகளின் தொகுப்பாகவோ அல்லது அறிவு, விழுமியங்கள், திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் செய்முறையாகவோ அதுவுமன்றி அறிவைத் தருவதற்கும் திறன்களை விருத்தி செய்வதற்குமென பயிற்சியும் அறிவுறுத்தலும் வழங்கும் செய்முறையாகவோ பல்வேறு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது.  அறிவு (Knowledge)  என்ற வகையில் முறைசார்ந்த படிப்பினூடான அடையப்படுகின்ற அறிவு எனக் கருதப்படுகிறது. கற்கை நெறி (Field of study) என்ற வகையில் கற்பித்தல் தொடர்பான கோட்பாடுகளையும் முறைகளையும் உள்ளடக்கிய ஒரு துறையாக கல்வி என்பது பொருள் கொள்ளப்படுகிறது.

அறிவு 
கல்வி மற்றும் அனுபவம் ஆகிய இரண்டினூடாகவும் தனிநபரால் பெறப்படுகின்ற புலமைத்துவமும் திறனும் அறிவு எனப்படுகிறது. தொடர்ச்சியான கற்றல் செயற்பாட்டினூடாக ஒரு பொருட்துறை பற்றி ஒரு மனிதன் மூளையில் பதிந்து வைத்திருக்கின்ற அல்லது அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படும் பொருட்டு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற தகவலும் அது தொடர்பான புரிதலும் அறிவு எனப்படுகிறது. சிதைந்துகொண்டு போகும் மனிதப் பண்பை விருத்தி செய்வதற்கு அடிப்படையாக இருப்பது அறிவு. விலங்குத்தன்மையை கூடியவரை தவிர்த்து மனிதத்தன்மையை தக்கவைப்பதற்கு மனிதனுக்கு இன்றியமையாததாக இருப்பது அறிவு. மானுட மேம்பாட்டுக்கு அடிப்படை அறிவு.
கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலை தகவலாகவே வைத்திருக்காது அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து சொல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு', 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய  குறள்களின் வரிகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவுக்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படை அறிவே. இந்த அறிவுங்கூட தன்னை வளர்ப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாது தனது சமூகத்தையும் வளர்க்கும் உணர்வைத் தரும்போது மட்டுமே சமூக மேம்பாடு என்பது சாத்தியமாகும்.

அறிவு என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். எமக்கு நிச்சயம் என்று தெரிந்தவை தொடர்பான அறிவாதார அனுபவங்களையும் இவை தொடர்பான தகவலையும் இது உள்ளடக்கும். எடுத்துக்காட்டாக நூலகம் என்ற எண்ணக்கருவை எடுத்துக்கொண்டால் சாதாரண நபரைப் பொறுத்து நூலகம் என்பது நூல்களைக் கொண்டுள்ள இடம். இதுவே படிக்கும் மாணவரைப் பொறுத்து மேலதிக வாசிப்புக்கான வாய்ப்பைத் தரும் இடம். நூலக அறிவைப் பெற்ற ஒருவரைப் பொறுத்து அது அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம். இதுவே ஆய்வாளர்களைப் பொறுத்து தமது ஆய்வுகளுக்கான தரவுகளைத் தரும் ஒரு இடம். நூல்களைக் கொண்டுள்ள இடம் நூலகம் என்ற கருத்து நூலகத்தைப் பயன்படுத்தாத ஒருவரைப் பொறுத்து அவதானிப்பினூடாகப் பெறப்பட்ட ஒரு அறிவாதார அனுபவம். இந்த அறிவாதார அனுபவம் எவ்வித செய்முறைகளுக்கும் உட்படுத்தப்படாது நேரடியாக மனித மூளைக்குள் கருக்கொள்ளும் அறிவாகலாம். நூலகத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் வாசகனைப் பொறுத்து இந்த அறிவாதார அனுபவம் மேலதிக அவதானிப்பினூடாகவோ தொடர்புச் செய்முறையினூடாகவோ பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படின் அது இன்னொருவருக்கு செய்திக் குறிப்பாகப் போய்ச் சேரலாம் அல்லது பெருத்த எண்ணிக்கையுடைய மக்களுக்கு பொதுசனத் தொடர்பு ஊடகம் ஒன்றினால் செய்தி வடிவில் பரப்பப்படலாம். உறுதிப்படுத்தப்படாத போது  இக்கருத்துநிலை தொடர்பான மேலதிக தேடல்கள் தரவாகத் தோற்றம் பெற்று இத் தரவுகள் செய்முறைப்படுத்தப்பட்டு தகவலாகத் தோற்றம் பெறலாம்.  இத் தகவலிலிருந்து அகநிலையில்  கருக்கொள்வதே அறிவாகின்றது.
அறிவு பலதரப்பட்ட உட்பொருட்களில் (நவெவைவைநள) நிலை கொண்டிருக்கும். தனிநபர் ஒருவரின் உள்ளக அறிவாற்றல் அமைப்பின் ஒரு மூலக்கூறாக நிலை கொண்டு தனிநபர் நுண்ணறிவாகத் தீர்மானம் எடுத்தல் செய்முறைக்கு இது அவருக்கு உதவலாம். சமூக நினைவகத்தில் நிலை கொண்டு சமூக நலனுக்கு உதவலாம். நூலக தகவல் நிறுவனங்களில் பதிவேடுகளின் வடிவில் நிலைகொண்டு நூலக தகவல் நுண்ணறிவாக அங்குள்ள தொழிற்திறன் சார்ந்த, சாராத அலுவலர்களின் அனுபவம் நுண்ணறிவு என்பவற்றின் தொகுப்பாக நிலைகொண்டிருக்கலாம். கணினி என்று வரும்போது நிபுணி அமைப்பில் நிலை கொண்டு அறிவுத் தளத்தின மூலக்கூறாக இயங்கி அவற்றின் அபிவிருத்திக்கு உதவலாம்.

கல்வி-அறிவு
கல்வி ஒரு செய்முறை. இது முறைசார்ந்தது.  அதேசமயம் அறிவு என்பது அனுபவம். இது முறைசாராதது. பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்விசார் நிறுவனங்களின் வழி கல்வியைப் பெற்றுக்கொள்ளலாம். அறிவு என்பது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பெற்றுக் கொள்ளப்படுவது. பயனுள்ள சில பிரயோகங்களுக்காக அறிவைப் பெற்றுக்கொள்ளும் செய்முறை கல்வியாக இருக்க நல்ல கல்வி, நல்ல தோழர்கள், நல்ல கலந்துரையாடல்கள், தீவிர வாசிப்பு என்பவற்றினூடாக அடையப்பெறுவதே அறிவாக இருக்கிறது.
கல்வி என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது. அறிவோ தானாக உருவாவது. சுயமாக அடையப்பெறுவது. கல்வி என்பது கற்றல் செயற்பாட்டினூடாக அடையப்படுவது. பலதரப்பட்ட உண்மைகள், கருத்துகள், கோட்பாடுகள் போன்றவற்றை கல்வி மூலம் அறிய முடியும். இவற்றை பிரயோகிப்பதே அறிவு எனப்படுகிறது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சட்டங்கள், ஒழுங்குவிதிகள், பாடத்திட்டங்கள் போன்றவற்றை கல்வி கொண்டிருக்கும் அதேசமயம் அறிவைப் பெறுவதற்கென எந்தவொரு வழிகாட்டுதல் கொள்கைகளும் கிடையாது. மாணவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், வாழ்க்கையில் வலியை அல்லது மகிழ்ச்சியை  ஏற்படுத்தும் கணங்கள், குழந்தைகள் போன்ற எதனூடாகவும் அறிவைப் பெறமுடியும்.
பாடநூல்களிலிருந்து பெறப்படுவது கல்வி. வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பெறப்படுவது அறிவு. கல்விக்கு வயதெல்லை உண்டு. வயது அதிகரிக்க அதிகரிக்க கல்வி மட்டமும் அதிகரிக்கும். அறிவுக்கு வயதெல்லை கிடையாது. கல்வித் தகுதியில் கூடிய நபர் ஒருவரைவிட குழந்தை ஒன்று அதிக அறிவுள்ளதாக இருக்கலாம்.
இதிலிருந்து தெரியவருவது கல்வி  என்பது முதற் பொருள் அறிவு என்பது முடிவுப் பொருள். கல்விக்கு அடிப்படை கற்பித்தல் அறிவுக்கு அடிப்படை கற்றல். கல்விக்கான பிரதான தளம் கல்விக்கூடங்கள். அறிவிற்கான பிரதான தளம் நூலகங்கள்.

கல்வி-அறிவு=கற்பித்தல்-கற்றல்
கல்வி என்பது பெரும்பாலும் கற்பித்தலுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது. ஒரு விடயம் தொடர்பாக ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையில் நடக்கும் இடைவினைத்தொடர்பே கற்பித்தல் எனப்படுகிறது. மாணவரின் தொகை  வயது, பால், நுண்ணறிவு, உடலாற்றல், கற்றலுக்கான ஊக்கம், பொருளாதாரநிலை போன்றவற்றில் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருக்கக்கூடும். அதே போன்று ஆசிரியரின் உதவியுடனோ, அது இன்றியோ, கற்பித்தற் துணை சாதனங்களின் உதவியுடனோ  கற்பித்தல் நிகழலாம். விடயம் இலகுவானதாகவோ, சிக்கல் வாய்ந்ததாகவோ இருக்கலாம் கற்பிக்கும் இடமானது பாடசாலைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ இருக்கலாம். கற்பித்தலுக்குத் தேவையான மூன்று முக்கிய கூறுகளான ஆசிரியர் மாணவர், விடயம் என்ற மூன்றும் மாற்றமுறுவதில்லை. கற்பித்தல் என்பது ஆசிரியரால் யாருக்கோ, எதைப்பற்றியோ எங்கேயோ கற்பிக்க முயற்சி செய்வதுடன் சம்பந்தப்படும் ஒன்றாகும்.
அறிவு என்பது பொதுவாக கற்றல் என்பதுடன் இணைத்துப் பொருள் கொள்ளப்படுகிறது. படிப்பு, அனுபவம் அல்லது கற்பித்தல் போன்றவற்றால் அறிவும் திறனும் பெறும் செய்முறை கற்றல் எனப்படுகின்றது. கற்றல் எனப்படுவது படிப்படியாக நடத்தையில் பொருத்தப்பாட்டை அடைவதாகும் என்கிறார் ஸ்கின்னர் அவர்கள். மனதின் சக்தியால் உந்தப்பட்டு தன் செயல்களால் ஒருவன் பெறும் மாற்றங்களையே கற்றல் என நாம் கூறுகின்றோம்.
வெறும் உற்றறிவு மட்டும் கற்றலுக்குப் போதுமானதல்ல. அனுபவங்களிலிருந்து ஒருவன் பெறுகின்ற அறிவைத் தீர்மானிப்பது அவனிடம் ஏற்கனவே இருக்கின்ற அறிவு. இந்த முன்னறிவின்றி கற்றல் சாத்தியமில்லை. இந்த முன்னறிவானது கற்றலை கருத்துநிலை மாற்றமாக  நோக்குவதற்கான கோட்பாடு ரீதியான புறப்பாடாக நிர்ப்பந்திக்கிறது. முன்னறிவு என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த அறிவாக இருப்பதனால் மனித ஆர்வத்துறைகள் அனைத்திலும் ஒருவருக்கு இருக்கக்கூடிய முன்னறிவை பட்டியலிடுவது சாத்தியமற்றது. ஏனைய துறைகளை விடவும் அறிவியல் மற்றும் கணிதத்துறைக்கு இந்த முன்னறிவு மிக அவசிமானது. அறிவியல் அறிவு என்பது நாளாந்தம் நாம் பெறும் அறிவைவிட வேறுபட்டது. நாளாந்த அறிவு என்பது உருவகங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் அடங்கிய பெரிய சேமிப்பகத்தைக் கொண்டது. இந்த அறிவை அறிவியல் அறிவாக மாற்றுவதற்கு தொடர்ந்து எம்மிடையே தேடல் இருத்தல் அவசியமானது. தேடலுக்குக் களமாக அமைபவை நூலகங்கள். அறிவியலாளர்கள் முன்னறிவிலிருந்து பெறப்படுகின்ற உருவகங்களையும் எண்ணக்கருக்களையும் மீள பயன்படுத்துவதன்மூலம் அறிவியல் அறிவைப் பெற்றுக்கொள்கின்றனர்.

கல்வியும் அறிஞர்களும் 
'குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டுமானால் அவர்களை நேசிக்க வேண்டும். ஆசிரியர் ஒவ்வொரு குழந்தையின் இதயத்துக்கும் வழி கண்டு பிடிக்க வேண்டும். குழந்தையின் நெருக்கத்தை ஆசிரியர் உணரவேண்டும். குழந்தையின் குதூகலத்தையும் வருத்தத்தையும் அனுபவிக்கவேண்டும். குழந்தையின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க வேண்டும். தானும் ஒரு குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை ஆசிரியர் மறக்கக்கூடாது' ரஷ்ய எழுத்தாளர் வசீலி சுகம்வீனஸ்கி அவர்களின் கருத்து இது.
 'குழந்தைகளினுடைய மனதின் இரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமைகளையும் அறிய முற்படுகையில் ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்' என்ற  வாசகத்தின்  உண்மையை, பயனைச் சரிபார்த்து குழந்தைகளின் நடவடிக்கைகளின் உட்பொருளினுள் ஆழப் புகுவதன் மூலம், குழந்தையின் உள்ளாற்றல்களைப் பயன்படுத்தி, அன்பு பரந்த மனப்பாங்கு, நகைச்சுவை உணர்வு, துடியார்வம், யதார்த்தத்தை அறியும் ஆக்கபூர்வமான அணுகுமுறை ஆகியவற்றைத் தட்டியெழுப்பி இவர்களுக்கு அவசியமான சமூக அம்சங்களை அளிக்கலாம்' இது ஆறுவயதுக் குழந்தைக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதை தனது மிக விருப்புக்குரிய தொழிலாக ஏற்ற ருஷ்ய விண்வெளிக்கழகத்தின் தலைவரும் இயற்பியல் விஞ்ஞானியுமான அமனஷ்வீலியின் கூற்று.
ஐம்புலன்களில் கண், காது, வாய் ஆகிய மூன்று புலன்களையும் பறிகொடுத்தவர் ஹெலன் ஹெல்லர். '19ம் நூற்றாண்டின் பெரியவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இருவர். நெப்போலியனும் ஹெலன் ஹெல்லரும்' என 20 வயதை அடையமுன்னரேயே உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வெயினால் போற்றப்படும் அளவிற்கு பெருமைபெற்றவர்.  மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவராக வைத்தெண்ணப்படுபவர். கல்வி பற்றிய இவரது கூற்று இது.
'கல்வி என்பது கரடுமுரடான கற்கள் நிறைந்த ஆற்றுப்படுகை. அதன்மேல் ஓடுகின்ற தெளிந்த நீரோட்டத்தைப் போல ஆழமற்றதும், தெளிவானதும் தான் குழந்தை மனம். ஆற்றைப் போலவே குழந்தையின் மனமும் ஒரு இடத்தில் மேகத்தைப் பிரதிபலிக்கும். இன்னொரு இடத்தில் ஒரு மலரைப் பிரதிபலிக்கும். வேறொரு இடத்தில் புதரைப் பிரதிபலிக்கும். ஆறு பெருகி உபயோகப்படுவதற்கு கண்ணுக்குப் புலப்படாத ஊற்றுக்கள் தேவை, மலை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் தேவை. இவையனைத்தும் அந்தந்த இடத்தில் வந்து கலக்கவேண்டும். இல்லாவிடில் குழந்தை மனம் என்ற சிற்றாறு கலங்கிவிடும். கரைபுரண்டு தண்ணீர் வீணாகிவிடும். மலைகளையும், மடுக்களையும் நீலவானையும் மலரைப் போல் பிரதிபலிக்கக்கூடிய திடம் ஏற்படவேண்டும் அந்தச் சிற்றாறுக்கு'
கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் அறியக்கூடிய அல்லது எமக்குக் கிடைக்கக்கூடிய மேற்கத்தேய சிந்தனைகள் கைத்தொழில் சமூகம் ஒன்றின் தோற்றத்துடன் இணைந்ததாக இருக்க, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளோ இரு ஆயிரியங்களைக் கடந்து நிற்கிறது. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல' என்னும்  நாலடியார் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

பிறப்புமுதல் நம்மிடம் இயற்கையாக அமைந்து காணப்படாமல் நாம் பின்னர் பெறும் அனுபவங்களும் அவற்றின் விளைவுகளும் கற்றல் என்பதில் அடங்குவதாக இந்திய கல்வியியலாளர் சந்தானம் குறிப்பிடுகிறார். இவ்வனுபவங்கள் அறிவு சார்ந்தவையாகவோ, மனவெழுச்சிகள் சார்ந்தவையாகவோ, உடலியக்கங்கள் சார்ந்தவையாகவோ அல்லது இவை யாவற்றுடனும் ஒருங்கே தொடர்புடையதாவோ இருக்கலாம். பிறப்பு முதல் இறப்பு வரை நமது வாழ்க்கையில் கற்றல் தொடர்ந்து நிகழ்கிறது.

அறிவும் அறிஞர்களும்
 அறிவு பற்றி மிகத் தெளிவாக முன்வைத்தவர்களில்; பிரான்சிஸ் பேக்கன் முக்கியமானவர். ஒரு நாட்டின் அபிவிருத்தியின் ஆதாரமாக அறிவு விளங்கும் என்பதை 16ம் நூற்றாண்டிலேயே மிகச் சரியாகக் கணித்து 'அறிவே ஆற்றல்' என்று விளம்பியது மட்டுமன்றி வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்ற இன்னொரு வாசகத்தின் மூலம் அறிவுக்கு அடிப்படை வாசிப்பு என்பதை தீர்க்கமாக முன்வைத்த பெருமைக்குரியவர். 'அறிவு என்பது இருவகை. எமக்குத் தெரிந்த அறிவு ஒரு வகை, எமக்குத் தெரியாத தகவலை எங்கே பெறலாம் என்ற அறிவு இன்னொரு வகை' என 18ம் நூற்றாண்டிலேயே அறிவு அகநிலைப்பட்டது, தகவல் வெளிநிலைப்பட்டது என அறிவையும்  தகவலையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார் அறிஞர் சாமுவேல் ஜோன்சன். மேற்படி வரிகளின் உட்பொருளை நன்கு அறிந்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே 'கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு' என்ற அவ்வையின் வரிகளின் உட்பொருளை நன்கு புரிந்து கொள்வர். மிக நீண்ட காலம் உறுதியுடன் நீடித்து  நிலைத்திருக்கின்ற தகவலே அறிவு என்கிறார் வெயிஸ்மன்.
 'தொட்டனைத்து ஊறும் மணற்கேணி  நாளும் கற்றனைத்து ஊறும் அறிவு' என்னும் திருக்குறள், 'நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு' என்னும் ஓளவையின் முதுமொழி போன்றன எமக்கு உணர்த்தி நிற்பது அறிவின்; முக்கியத்துவம் என்பது தமிழ் மக்களால் இன்று நேற்று உணரப்பட்டதொன்றல்ல என்பதையே.

தேடல்கள்
கல்வித் தகுதிக்கான கற்றல் செயற்பாட்டிலிருந்து அறிவு ஊறுவதற்கான கற்றல் செயற்பாட்டுக்குள் என்னை நுழைத்துக் கொண்ட காலம் முதலாய் கல்விக்கும் அறிவுக்கும் இடையில் ஒரு இணைப்பைத் தேடித் தான் எனது பெரும்பாலான தேடல் இருந்திருக்கிறது. கற்கக் கற்க அறிவு ஊறும் என்ற வள்ளுவன் வாக்கு உண்மையானால் கற்றல் கற்றலாக மட்டும் ஏன் நிற்கிறது என்ற வினவல் இந்தத் தேடல் நோக்கி என்னை உந்தித் தள்ளியது. படிப்பு கல்வியைத் தரும் பரந்துபட்ட வாசிப்பு அறிவைத் தரும் என்பது நன்கு தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட கல்வியா அறிவா பெரிது என்ற வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில்; அறிவைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பொய்மைகளே உண்மைகளாய் திசையின்றி அலைந்த எனது மனத்தைச் செப்பனிட்ட பாடசாலைகள் மற்றும் இன்றுவரை எனது  மனதில் பூசிக்கும் பேறு பெற்ற எழுத்தறிவித்த இறைவர்களையும், சுமைகளின் அழுத்தங்களுக்குள் தப்பிப் பிழைப்பதற்கான உபாயங்களைத் தந்த பல்கலைக்கழகங்களையும் அடியோடு ஒதுக்கிவிடவோ அல்லது கல்வியைப் பெரிதாக்கி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஒத்ததுகளைப் பிணைத்து ஒவ்வாமைகளை விலக்கும் அறிவுக்கு ஆணிவேராக இருந்த நூலகத்தை ஒதுக்கிவிடவோ நான் தயாராக இல்லை. எனவே இரண்டுக்குமிடையிலான சமநிலையைத் தேடி ஓடிய எனது முயற்சி வீண் போகவில்லை.
கல்வி அறிவு என்ற இரண்டு அம்சங்களும் முறையே கற்பித்தல், கற்றல் என்ற இருபெரும் செய்முறையில் தங்கியிருப்பினும் 'கற்பதற்கான கற்றல்' என்ற அம்சமும் 'கற்பதற்கான கற்பித்தல்' என்ற அம்சமும் அனைத்தையும் விட முக்கியமானது என்பது தெளிவாகின்றது. எனவே குடும்பம் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் விட கற்றல் கற்பித்தல் பணியின் பெரும் பொறுப்பு ஆசிரிய சமூகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
'ஒரு மனிதன் கற்பது எவ்வாறு எனக் கற்றுக் கொள்வதே கல்வியின் இலக்காகும். கற்றுக் கொள்வதற்கான ஆற்றலானது அறிவை விட முக்கியமானதாகும். அறிவு, காலத்திற்கொவ்வாததாகப் போனாலும் கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான திறவு கோலாக விளங்குகிறது'. என்ற கூற்று அறிவை விட கல்வி முக்கியம் என்ற கருத்துநிலையைத் தருகின்றது. அப்படியாயின் பாடசாலைகள் ஏன் அறிவுக்கான திறவுகோலாகச் செயற்பட முடியாதுள்ளது என்ற வினா எழுவதும் இங்கு தவிர்க்க முடியாததாகிறது.
துரதிருஷ்டவசமாக எமது கல்விமுறையானது சுயகற்றலுக்கு வழிப்படுத்தத் தவறுகின்ற ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. பாடசாலைகள் மட்டுமன்றி பல்கலைக்கழகங்கள் கூட தயார்நிலைக்கல்வியிலேயே கருத்துச்செலுத்துகின்றன. இதன்காரணமாக கற்பித்தல் என்ற செய்முறை மேலோங்கி இருப்பது மட்டுமன்றி ஆசிரியர்களின் மிகப் பெரும் சுமையாகவும் பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வித்திட்டங்கள் மாணவர்களுக்கான கற்பித்தற் செயற்பாட்டிலிருந்து கற்றற் செயற்பாடு நோக்கி வழிப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க ஆசிரியருக்கான கல்வித்திட்டங்கள் அவர்களின் சுயகற்றலை மழுங்கடித்து  கற்பித்தல் செயற்பாடு நோக்கி வழிப்படுத்துகின்றதோ என எண்ணுமளவிற்கு ஆசிரிய சமூகத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. ஆசிரியர்களின் அறிவை உயர்த்தும் நன்நோக்குடன் முனைப்புப்படுத்தப்பட்டிருக்கின்ற இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள்  மூலமான ஆசிரியர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் வார இறுதிநாட்களில் கூட ஓய்வின்றி அலையுமளவிற்கு ஆசிரியர்களின் சுமையை இன்னும் அதிகமாக்கியிருக்கின்றமையானது கற்பித்தல் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்குப் பதில் அதில் தொய்வு நிலையைத் தான் ஏற்படுத்தியிருக்கின்றது. கசடு அறக் கற்பதற்கு தம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் மாணவ சமூகத்திடமிருந்து ஆசிரிய சமூகத்திற்கும் ஆசிரிய சமூகத்திடமிருந்து ஆசிரி நிர்வாகத்திற்கும் எப்போது வரத் தொடங்குகின்றதோ அப்போது தான் கற்றலும் கற்பித்தலும் மனதார விரும்பி மேற்கொள்ளும் ஒரு பணியாக இருக்கும்.
தேடலுணர்வு கணிசமாக மழுங்கடிக்கப்பட்ட இரண்டாம்நிலைக் கல்வியைக் கடந்து தேடலுணர்வுக்கு களமமைக்காத பல்கலைக்கழகக் கல்வியில் புகுந்து வெளிக்கிளம்பும் ஆசிரிய சமூகத்திடம் நிரம்பிய கல்வி, ஆழமான அறிவு, விசாலமான ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை உயர்ந்த கொள்கை, சூழலைப் பயன் செய்தல், தேசிய நோக்கம் முதலிய பல கருத்துக்களை உள்ளடக்கிய புலவர் மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் 'ஆசிரியர் என்பவர் சூழ்ந்த பார்வையுடையவர்' என்ற வரைவிலக்கணத்தையோ '21ம் நூற்றாண்டின் ஆசிரியருக்குத் தமது மாணவர்களிடையே காணப்படும் அடிப்படை நிபுணத்துவங்கள், படைப்பாற்றல் திறன் மாற்றம் அல்லது புதுமை காணல் என்பவற்றின் சிறப்பம்சங்கள், பல்துறைப்புலமை, மாறும் நிலைக்கேற்ப அமைதல், விமர்சனப்பாங்கு, பிரச்சினைகளை இனங்காணல், மற்றும் தீர்ப்புத் திறமை என்பன பற்றிய ஆற்றல் இருக்க வேண்டும்'  என்ற  யுனெஸ்கோ நிறுவனத்தின் கொள்கையையோ எதிர்பார்க்க முடியாது. உலகளாவிய ரீதியில் நடைமுறையிலிருக்கும் சிறந்த திட்டங்களின் தொகுப்பாக இலங்கையின் கல்வித் திட்டங்கள் அமைந்திருந்தபோதும் கல்வித்திட்டங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சியோ அவர்களிடம் மனமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தூண்டுதல்களோ மிகக்குறைவு. வறுமை வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ள எமது தேசத்தில் கல்வியின் முழு நோக்கமுமே தொழில் நோக்கமாகவே உள்ளது.
அதுமட்டுமன்றி ஆசிரியத் தொழிலின் பின்னரான பட்டப்பின் கல்வித் தகைமைகளோ அல்லது வேறு தகைமைகளோ ஆசிரியர் என்ற தனிநபரின் தகுதியை நிர்ணயிக்கும் பத்திரங்களாகத் தொழிற்படுகின்றனவேயன்றி ஆசிரியத் தொழிலின் மேன்மையை வெளிப்படுத்தும் ஒன்றாக அமையாமை காரணமாக முழுக்க முழுக்க வகை மாதிரி (Role model) தேவைப்படும் பாடசாலையின் மாணவப்பருவ வாழ்க்கையில் கல்விசார் தலைமைத்துவம் என்பது இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளமையை மறுக்கமுடியாது.

அனுபவங்கள்
நூலகர் என்ற வகையில் கல்விக்கும் அறிவுக்குமிடையிலான இணைப்பில் அறிவுக்கு அடித்தளமான சுயகற்றல் செயற்பாட்டுக்கு வழிநடத்திய ஓரிருவரைப்பற்றி குறிப்பிடுவது இங்கு பொருத்தமானது.
'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்பதிலும் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. இந்த வாசகங்களை நான் பாடப்புத்தகத்தில் படிக்கவில்லை. நூலகத்திலும் பெற்றுக்கொள்ளவில்லை. வீட்டு முன்புறம் உள்ள போட்டிக்கோவில் அமர்ந்திருக்கும் இரண்டாம் வகுப்புப் படித்த அப்பாவிற்கும் வீட்டின் பின்புற அறையில் மரியாதை நிமித்தம் மருமகன் பார்வையிலிருந்து தவிர்த்திருக்க விரும்பும் பாலபண்டிதையான எனது ஆச்சிக்கும் (அம்மாவின் தாய்) இடையில் இடையிடையே நடைபெறும் இலக்கியத் தூதுகளிலிருந்து பொறுக்கியெடுத்தவற்றில் ஒன்று இது. பொறுக்கியெடுத்தவற்றை அப்படியே அணியும் எண்ணமும் கூட எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. 'எதனையும் உற்றுணர்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நிதானித்து, எதிர் விளைவுகள் பக்க விளைவுகளை அடையாளங் கண்டு, பயன்விளைவு ஆராய்ந்து, அனுகூலங்கள் பிரதிகூலங்களை கருத்தில் கொண்டு, ஒன்றைக் கூறும்- நம்பும் -தீர்மானிக்கும்- தீர்வு காணும்- செயற்படுத்தும்- அறிவும் மனப்பாங்கும் உடைய உள்ளம் அறிவு சார் உள்ளம் என்றும் அத்தகைய சிந்தனை அறிவு சார் சிந்தனை என்றும் படிப்பு என்ற நூலில் படியாதவன் கூறும் விளக்கத்தின் எடுத்துக்காட்டாக இருக்க நான் விரும்பியமையால் ஐம்புலன்வழி பெறும் உற்றறிவு, ஊடுருவறிவு, படிப்பறிவு, காண்பறிவு, தொட்டுணர் அறிவு, அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க விழைகிறேன்.
கற்பித்தலானது பாடப்புத்தகத்தை நெட்டுருப் போடுவதற்குப் பயிற்றுவித்தல் அல்ல என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. மனிதப்பண்புகளின் வளர்ப்புப் பண்ணைகள் எனக் கருதப்படும் குடும்பம், கூட்டாளிக்குழுக்கள் மற்றும் சனசமூகநிலையங்கள் ஆகிய மூன்றிலும் குடும்பம் என்னைச் செதுக்குவதற்குப் பெரிதாக உதவவில்லை. மற்றைய இரண்டினதும் அருகாமைகூட எனக்கு இருந்ததில்லை. அதுபோன்று பாடசாலைக்காலத்தின் முதற் பத்து வருடங்கள் கூட உற்றறிவின் (Observation)  வழியே தான் எனது பெரும்பாலான கற்றல் இருந்திருக்கிறது எனினும் அந்தக்காலத்தில் இந்த உற்றறிவினூடாக பல மாதிரிகள் (Models) எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆணோ பெண்ணோ 'தலைமை வாத்தியார்'  என்ற பெயருக்கே உரித்தான சகல அம்சங்களுடனும் உள்ள அதிபர்களின் காலம் கிட்டத்தட்ட 1970களின் இறுதிப்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டது என்ற கசப்பான யதார்த்தத்தை உள்வாங்கும் இத்தருணத்தில் இந்தத் தலைமை வாத்தியார்களின் அகத் தோற்றத்தை விடவும் அவர்களின் நடத்தைக் கோலங்கள்; எனக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது.
 கற்பதற்கான கற்றல் நோக்கி வழிப்படுத்திய முதலாவது ஆசிரியர் என்ற பெருமைக்குரியவர் 'குஞ்சக்கா' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த எனது மதிப்புக்குரிய ஆசிரியர் திருமதி யோகலட்சுமி இராசரத்தினம் அவர்கள். க.பொ.த உயர்தர வகுப்பில் புவியியல் பாட ஆசிரியையாக இருந்தபோது அவரது வகுப்பில் பாடக்;குறிப்பு எதுவும் எழுதியதாக எனக்கு நினைவில்லை. உலகப்படத்தில் இடங்களின் அமைவிடத்தை அவர் கற்பித்ததாகவும் எனக்கு ஞாபகமில்லை. மாறாக நாளாந்தம் வெளிவரும் ஆங்கில செய்தித்தாள்களில் உள்ளடக்கப்படுகின்ற வெளிநாட்டுச் செய்திகள் ஒவ்வொன்றிலும் குறிப்பிடப்படும் நாடுகள் ஒவ்வொன்றையும் உலகப்படத்தில் குறித்து வந்து அவரிடம் ஒப்படைப்பதே எமது பணி. பௌதிகப் புவியியல் கற்பித்த முறை இன்னும் அலாதியானது. மொங்கவுசின் பௌதிகப் புவியியல் தத்துவங்கள் என்னும் நூல் நூலகத்தில் இருக்கும் இடத்தை அறிந்து வந்து அவரிடம் சொல்லுதல், ஊசியிலைக் காடுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி ஒப்படைத்தல் இப்படித்தான் ஒவ்வொரு வகுப்பும் நகரும். இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விடயம் வகுப்புப் பரீட்சைகள் நடந்து முடிந்ததும் பரீட்சைத்தாள்களில் உள்ள வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் அவர் அளிக்கும் விளக்கத்துக்கமைய அவரவர் பரீட்சைத்தாள்களை அவரவர்களே திருத்தி தமக்குரிய புள்ளிகளைப் போட்டு அவரிடம் ஒப்படைப்பது. பயிற்சிப்பட்டறைகள் நிரம்பி வழியாத 1980களின் ஆசிரிய சமூகத்தின்;  கற்பதற்கான சிறந்த கற்பித்தல் முறையாக நான் இதைக் கருதுகின்றேன். இதன் வெளிப்பாடுதான் பல்கலைக்கழகக் கல்விக்காலத்தில்  சுய கற்றலுக்கு அடித்தளமான நூலகத்தில் அதிக பொழுதுகளைக் கழிக்கவும் பாடசாலையில் வகுப்பிலேயே மிகக் குறைந்த புள்ளிகள் எடுத்திருந்த ஒரு பாடத்துறைசார்ந்து என்னால் சிறப்புத் தேர்ச்சி பெறவும் உயர் புள்ளிகள் எடுக்கவும் முடிந்தது.

எமது புரிதல்கள் தொடர்பாக எம்மிடையே மாற்றம் வேண்டும். 'தௌ;ளிய அறிவும் நன்நடத்தையும் கொண்ட பண்பட்ட மக்களை உருவாக்குவதே கல்வி' என்ற மாட்டின் லுதர், 'மனிதனை மனிதனாக வாழ வைப்பதே உண்மைக் கல்வி' என்ற சுவாமி விவேகானந்தர், 'அன்பை உணருதல், அன்பு காட்டுதல் என்றால் என்ன என்று கண்டுபிடித்தல், அன்பு காட்டுதல் என்பவையே கல்வி' என்ற இந்திய கல்விச் சிந்தனையாளர் ஜே.கிருஸ்ணமூர்த்தி, 'உன்னத மரபுகளையும் அன்பையும், இரக்கத்தையும் ஒருவரிடம் பேணி வளர்க்கவும் முழுமையான வாழ்க்கையை வாழ உதவுவதுமே கல்வி' என்ற கல்வியியலாளர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் சிந்தனைகள் எமக்கு வெளிக்காட்டுவது மனிதத்தை மனிதர்களிடம் உருவாக்குவதே உண்மைக் கல்வியின் நோக்கம் என்பதையே. அறிவுசார் சிந்தனையானது மனிதநேயத்துடன் இணைந்ததாக இல்லாதுவிடின் கல்வியின் நோக்கம் நிறைவேறுவது கடினம். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்கு பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்த பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்புத் திறனை ஊக்குவிக்கக்கூடிய பிரதான தளம் நூலகம் என்பதில் எவ்வித கருத்துமுரண்பாட்டுக்கும் இடம் இருக்காது. மனித வாழ்வைச் சரியான முறையில் கொண்டு நடத்துவதற்கு முக்கியமானது சிந்தனைகள். செயலுக்கு அடிநாதம் சிந்தனைகள். ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு அத்திவாரமாக இருப்பது அவனது எண்ணங்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வதற்கு அவசியமானது வாசிப்பேயாகும்.


ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்
கல்விசார் நூலகர்
யாழ்.பல்கலைக்கழகம்
29-11-2011